நாரம்மல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உப பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸ் உப பரிசோதகர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த லொறி சாரதியின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பதில் பொலிஸ் மா அதிபர் நட்டஈடாக வழங்கியுள்ளார்.