ஐக்கிய இளைஞர் சக்தியின் புனரமைப்பு கூட்டத் தொடரின் முதலாவது கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் இன்று (26) பதுளை நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி எரந்த வெலியங்க,சட்டத்தரணி ஊடகவியலாளர் தில்ஷான் பதிரத்ண மற்றும் ஊடகவியலாளரும் கலைஞருமான பேஷல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.