முள்ளிவாய்க்கால் கரையில் சிறிய படகுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் மீனவர் ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

சடலத்தை பரிசோதித்தபோது, ​​இறந்த நபரிடம் இருந்து பங்காளதேஷ் நாட்டின் பண நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சிறிய படகின் பல இடங்களில் இந்திய தெலுங்கு மொழியில் சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் உயிரிழந்தவர் இந்தியராகவோ அல்லது பங்களாதேஷை சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்பதால் இது தொடர்பில் கடற்படைக்கு அறிவித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் தூதரகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளதா முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், பல நாட்களாகியுள்ளதால் சடலம் சேதமடைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.