ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை பிரதேச
செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நேற்று(15) கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை
அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.
அப்துர் ரஸ்ஸாகின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ முஜீபுர் ரஹ்மான், கௌரவ புத்திக பத்திரன,இம்ரான் மஹரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திரதாச கலப்பத்தி உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.