தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் இதுவரை 24,523 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மே லும் மே மாதத்தில் மாத்திரம் 6,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு,கம்பஹா,களுத்துறை,கண்டி,கேகாலை,மட்டக்களப்பு,இரத்தினபுரி,திருகோணமலை மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

24 மணிநேரமும் காய்ச்சல் நீடித்தால் டெங்கு நோய்க்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு இருந்தால் உடன் மருத்துவரை அனுக வேண்டும் என்றும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டால் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மேலும் அதிகம் நீர் பருக வேண்டும் என டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார்.