கண்டி ஹந்தான மலைக்கு சுற்றுலா சென்ற ராகம மருத்துவ பீட மாணவர்கள் 181 பேர் நேற்று மாலை பொழுதில் காணாமல் போனதை அடுத்து கடுமையான முயற்சியை அடுத்து மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்..

 மோசமான வானிலை காரணமாக கடும் பனி நிலவுகிறது. இப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமமாகும். இந்நிலையில் குறித்த மாணவர்கள் சென்று வழி தவறியுள்ளனர்

 எவ்வாறாயினும் மாணவர்களை மீட்பதற்காக இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கையை நேற்றைய தினம் ஆரம்பித்ததுடன் சுற்றுலா பயணிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். .