இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. ஆறு பணியாளர்களுடன் கிழக்கு ஆபிரிக்க கடற்கரையில் கப்பல் கடத்தப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

கடந்த பன்னிரெண்டு தினங்களுக்கு முன்னர் திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பல நாள் மீன்பிடிக் கப்பலையும் அதில் இருந்த ஆறு மீனவர்களையும் கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர். கடத்தப்பட்ட மீனவர்கள் மற்றும் கப்பலை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.