கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுவினருக்கு எதிரான சோதனையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

காலி, வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை பொலிஸார் துரத்திச் சென்றதோடு, துப்பாக்கிச் சண்டையில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.