ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாவலரை தலையில் தாக்கி கொன்று விட்டு, பள்ளிவாசலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரண்டு வருடங்களாக பாதுகாவலராக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிராபுர பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.இப்றாஹிம் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 1 மணிக்கு சுவரில் குதித்து பாதுகாவலர் இருக்கும் அறைக்கு வந்த கொலையாளி பாதுகாவலரை தலைதாக்கி விட்டு பள்ளி உண்டிலை உடைத்து பணத்தை எடுத்து சென்று தப்பியுள்ளார்.

ஹட்டன் ஜும்மா பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் பல இடம்பெற்றதை அடுத்து பாதுகாவளர் ஒருவரை பணிக்கு அமர்த்தியதாகவும் அவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி சிசிடிவி கெமராவில் கொலையும் உண்டில் உடைப்பு சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் பாதுகாவளரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கொலையாளியை பிடிப்பதற்கு பொலிஸார் பல மட்டங்களில் விசாரணை செய்து மும்முர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக தெரியவருகிறது.