பொத்துவில் பிரதேச மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுக்கும் முகமாகவும் அதனை தீர்ப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உயர் மட்ட குழு நாளை பொத்துவில்லுக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த விஜயத்திற்கு பொதுச்செயலாளர் ரன்ஜித் மத்தும பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன,எரான் விக்கிரமரத்ன,புத்திக பதிரன,முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுளை பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எச் அப்துர் ரஹ்மான் ஏற்பாடு செய்துள்ளார்.