நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று (26) பிற்பகல் முதல் 300 மெகாவோட் மின்சாரம் மீண்டும் தேசிய அமைப்பில் இணைகிறது
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்ததாலும் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திருத்த பணி காரணமாக மின்வெட்டு 03 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டது