கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டுவந்த பாதிமா அப்ரா அவர்களின் ஜனாஸா இன்று பேராதனை பகுதியில் கண்டெடுப்பு

கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டுவந்த பாதிமா அப்ரா அவர்களின் ஜனாஸா இன்று பேராதனை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் குழந்தையின் உடல் இதுவரை மீற்கப்படவில்லை

கடந்த 5 ஆம் திகதி மாலை வேரை கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு ஐவர் சென்றுள்ளனர். இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் ஐவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் இருந்தவர்களால் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் அன்றையதினமே ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குழந்தையை தேடும் பணி தொடந்து முன்னெடுக்கப்படுகின்றது.