எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து இன்று காலை முதல் நாடுபூராகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த போராட்டங்களில் ரம்புகன்ன,மாவனெல்ல,கம்பளை,மாத்தறை,கண்டி,பாணதுறை போன்ற பகுதிகளில் போராட்டம் பெரும் உக்கிர தன்மையை காணமுடிந்தது.

ரம்புக்கனயில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றது.கண்ணீர்புகையும் பிரயோகிக்கப்பட்டது.ரம்புக்கன ரயில் வீதியை மறித்த காரணத்தினால் மக்கள் மீது பொலிஸார் துப்பிபாக்கி சூடு நடத்தினர்.இதில் ஒருவர் உயிரிழந்தார்.10 காயமுற்றனர்.

மேலும் நாடுபூராகவும் பஸ் போக்குவாரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.மேலும் போராட்டம் காரணமாக வாகன நெரிசல் காணப்பட்டது.