உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் ( தனியார்-) தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் சிங்கள நாளிதழான திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் – அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது.
இலங்கையின் பல்வேறு கொள்கைகளை கொண்ட நாளிதழ்கள் விலைகள் அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் இருந்து அச்சுத்தாள்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாகவும் தங்கள் பக்கங்களை குறைத்துக்கொண்டுள்ளன.
இதே காரணங்களிற்காக ஆண்டிறுதி பரீட்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.