எரிபொருள் விலையேற்றம் செய்துள்ள நிலையில் பலவந்தமான முறையில் பஸ் கட்டணத்தை அரசாங்கம் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய முறையில் டீசல் வழங்காமையை கண்டித்தும் தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமையால் நாடுபூராகவும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மேலும் ஒரு சில தனியார் பஸ் வண்டியில் சேவையில் ஈடுப்பட்டுள்ளதுடன் இபோச பஸ்கள் மற்றும் ரயில் சேவையில் ஈடுப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக பஸ் மற்றும் ரயில்களில் நெருக்கத்துடன் மக்கள் பயணிப்பதை காணமுடிந்தது.