கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் பூண்டலோயாவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்துள்ள நிலையில் கடும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து பாதையின் வலுக்கல் நிலையின் காரணமாக சாலையில் இருந்து தவறி சுமார் 80 அடி பாறையில் விழுந்தது.

விபத்தின் போது, ​​பேருந்தில் 14 பேர் பயணித்துள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் கம்பளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.