வரும் நாட்களில் மூன்று எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரவுள்ள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஒரு கப்பல் 8 அல்லது 9 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையவுள்ளதுடன், மற்றைய கப்பல் 11 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வரவுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி. குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று நடந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.