எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஜூலை 4ம் தேதி உட்பட அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் ஜூலை 8ம் தேதி வரை மூடப்படும்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையே விடுமுறை வழங்க காரணம்.
கல்வி அமைச்சருக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் நடந்த சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.