ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் VAT திருத்தத்தின் காரணமாக பஸ் கட்டணங்கள் 15%
அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய உள்ளீடுகளை கருத்தில் கொண்டு கட்டணங்களை திருத்துமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் நாடு முழுவதும் தொடர் பஸ் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.