கடவுச்சீட்டு வழங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டணம் நாளை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு நாள் சேவை 20,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேவை 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.