பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் மாட்டிக் கொண்ட ஹட்டன் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்துள்ளார்.
நேற்று (6) தனது கணவருடன் கடவுச்சீட்டு வரிசையில் வந்த அவர், பிரசவ வலி காரணமாக இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு 500 கிராம் எடை குறைந்த குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.