வடக்கு சுமத்ரா கடற்பரப்பில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காலை 10.49 மணியளவில் பதிவாகியுள்ளது. எனினும் இலங்கைக்கு சுனாமி அனர்த்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. வழமை போன்று தமது அன்றாட நடவடிக்கைகளில் கரையோர மக்கள் ஈடுப்படலாம். எனினும் கரையோர மக்கள் அடுத்து வரும் அறிவிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் விசேட அறிக்கையை வெளியிட்டது.