2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் தமிழ் மொழி மூலம் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக பரீட்சைகள் திணைக்களத்தினால் 148 புள்ளிகள்  குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் தான் ஒரு பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.