கொழும்பு மாநகர சபை அடக்கம் செய்வதற்கான கல்லறைக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால், கொழும்பு நகர மக்கள் மரணத்திற்கும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி இரண்டு சதுர அடி கல்லறைக்கான கட்டணத்தை 180,000 ரூபாவாக மாநகர சபை உயர்த்தியுள்ளது.

சிறிய இடத்தில் இறந்தவரின் அஸ்தியை மட்டுமே புதைக்க முடியும். காணியின் பெறுமதி அதிகரிப்புக்கு ஏற்ப கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மாநகர சபையில் வசிப்பவர்களுக்கு தகனம் செய்வதற்கான கட்டணத்தை ஆயிரம் ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாவாகவும், மாநகரசபைக்கு வெளியில் வசிப்பவர்களுக்கு 20,000 ரூபாவாகவும் மாநகர சபை அதிகரித்துள்ளது.