காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடுபூராகவும் பெய்து வரும் அடைமழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் இரத்தினபுரி மாவட்ட வளாகத்திலுள்ள கலுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தாழ்வு பகுதிகளான பெல்மடுல்ல,நிவிதிகல,குருவிட போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கலகங்கை,நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.