லுணுகம்வெஹர, பதவ்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது பிள்ளைகளுடன் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யு.எஸ். டி. திலின பிரசாத் லுணுகம்வெஹெர பிரதேச செயலகப் பிரிவில் பல்பணி செய்பவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

லுணுகம்வெஹர பிரதேசத்தில் பல திருட்டு மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவருடன் கொலையாளியின் தந்தை மற்றும் சகோதரனும் வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக லுனுகம்வெஹர பொலிஸார் தெரிவித்தனர்.