கேகாலையில் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை மாணவி ஒருவர் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார்.

கேகாலையில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் தடுத்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இளைஞன் சிறுமிக்கு அமிலத்தை குடிக்க வைக்க முயற்சித்ததாகவும், அதன் போது அவரது தந்தை அதைத் தடுத்ததாகவும், இதன் விளைவாக மூவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயங்களுடன் பாடசாலை மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

21 வயதான யுவதி கேகாலை உடுமாகம பிரதேசத்தை வசிப்பிடமாகவும், இளைஞன் கேகாலை நகரை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.