நாளைய தினம் 13 மணிநேர மின்வெட்டு அமுல்ப்படுத்தவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

நீர் மின் நிலையங்களை இயக்க மழைவீழ்ச்சி இல்லாதமையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஏனைய மின் நிலையங்களை இயக்க டீசல் இல்லாதமையே மின்வெட்டுக்கு பிரதான காரணமாகும்.

அத்தோடு வெள்ளியன்று 15 மணிநேர மின்வெட்டுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது