கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர். உணவுப் பிரச்சினை தொடர்பாக மையத்தில் உள்ள இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமடைந்த பின்னர் இவர்கள் தப்பிச் சென்றுள்ளார்.

மோதல் காரணமாக சுமார் 25 கைதிகள் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.