நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தெஹிவளை, காலி, அம்பலாங்கொடை கடற்பிரதேசங்களில் கடல் கொத்தளிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இன்று (02) மாலை கடல் அலைகள் கரையை நோக்கி வந்ததால் காலி துறைமுக பொலிஸ் சுங்கம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீனவப் படகுகளும் அலைகளினால் நிலப்பகுதியை நோக்கி ஒதுங்கின.

அத்துடன் காலி -மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதுடன், நிலவும் பலத்த காற்றுடன் கடல் அலைகள் கரையை நோக்கி பாய்ந்துள்ளன.

சிவப்பு எச்சரிக்கை

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 அல்லது 3.5 மீற்றர் வரை எழும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது