பொலன்னறுவை மாவட்ட பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்.அமரகீர்த்தி அத்துகோரலவை கடந்த மே மாதம் 9ஆம் திகதி தாக்கி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்