ரயில்வே திணைக்களத்தின் ஓட்டுநர் பற்றாகுறையின் காரணமாக இன்றைய தினமும் ஐந்து ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு உதயதேவி ரயில்சேவை, கோட்டை- புத்தளம், கோட்டை-களுத்துறை உட்பட ஐந்து ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஓட்டுநர் சேவையில் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைப்பதற்கு அரச சேவைகள் ஆணைக்குழு இன்னும் பரிந்துரைகள் முன்வைக்காதமையை அடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.