நிட்டம்புவ – ஹொரகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சைக்களில் வருகை தந்திருந்த குறித்த இளைஞருக்கும், அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் இளைஞர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு 14 யை சேர்ந்த 29 வயதான நபரே உயிரிழந்துள்ளார். தாக்கிய சாரதி இளைஞர் தப்பியோடியுள்ளதுடன் அவரை தேடி பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகிறது.