தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களால் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சேவைக்கு சேர்க்கப்பட்ட பஸ்களில் 15 தொடக்கம் 20 வீதமான பஸ்களே தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.