இன்று (22) காலை பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு கொஸ்கொட சுஜீ தலைமை தாங்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஸ்கொட சுஜி தற்போது டுபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக தங்காலையில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்ற கொலை வழக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையது என தெரியவருகிறது.