ஐக்கிய மக்கள் சக்தியின் ஆரையம்பதி பிரதேச செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் இன்று (16) இடம் பெற்றது.
ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் கௌரவ தயானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ முஜீபுர் ரஹ்மான், கௌரவ புத்திக பத்திரன, பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.