ஐக்கிய மகளிர் சக்தி தொடர்ச்சியாக ஏற்ப்பாடு செய்துள்ள “பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்போம்
-செம்மஞ்ஞள் நிறத்தால் உலகை அழகுறச் செய்வோம்” என்ற தொனிப்பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்வுகளின் தொடர்ச்சியாக
எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலத்தில் இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் பிரகாரம் (04.12.2021) செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது.

இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் திருமதி.சுதர்சினி கிலர்பதி, ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் உமாச்சந்திரா பிரகாஷ் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.