இன்னும் இரு நாட்களுக்கு தேவையான எரிபொருளே ரயில் திணைக்களத்திடம் கையிருப்பில் உள்ளதால் ரயில் சேவையும் இரு நாட்களில் ஸ்தம்பிதம் அடைய கூடும் ரயில் ஒட்டுனர் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும் டீசல் தட்டுப்பாட்டினால் பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.எனினும் அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.