அராஜக ஆட்சிக்கு எதிராகவும் விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக பொத்துவில் நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது எரிபொருள் விலையை குறை!, உணவுப் பொருட்களின் விலையை குறை!,வாழ்க்கை செலவை குறை!,இல்லையேல் விலகி செல் என்ற கோஷாங்களை எழுப்பிய வண்ணமும் சுலோகங்களை ஏந்திய வண்ணமும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்தை பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அப்துல் ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்தார்.