நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்திய அதிகாரிகள் சங்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த நிலைமையின் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புற்றுநோய்,சிறுவர்களுக்குரிய மருந்துகள்,விசர்கடிகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள்,இன்சியுலின் போன்றவைகள் வைத்தியசாலைகளில்  தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இன்சியுலினுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தனியார் மருந்தகங்களில் மேற்குறிப்பிட்டவைகளில்  ஒருசில மருந்துகள் இருப்பினும் ஒரு சிலவற்றுக்கு தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.