கருத்தடை குற்றச்சாட்டில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன்  கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு  சம்பளமும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு நிலுவைகளை ஜூலை 10 ஆம் திகதிக்குள் வழங்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 9 ஆம் திகதியன்று கையொப்பமிடப்பட்ட 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா பெறுமதியான முழு சம்பள நிலுவை காசோலை அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் ,அந்த முழு தொகையையும் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையை தீர்க்க சுகாதார அமைச்சுக்கே மீள அன்பளிப்பு செய்துள்ளார்.