மகாவலி கங்கை பெருக்கெடுத்ததால் பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய மற்றும் கல்லெல்ல பகுதிக்கு இடையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன்காரணமாக அந்த வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

இந்த பகுதியில் இரண்டு இடங்களில் சுமார் 3 முதல் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. பொலன்னறுவ மாவட்டம் உட்பட பல பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது