அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்றத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் சுற்றுலா விசாவில் மக்களை லாவோஸுக்கு அழைத்துச் சென்று, தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளை தவிர்த்து வந்த அவர், சட்டத்தரணி ஊடாக பணியகத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.