2022ஆம் வருடம் அரச பாடசாலைகளுக்கான தரம் 1 மாணவர் அனுமதி ஏப்ரல் 19ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அனுமதி ஏப்ரல் 5ஆம் திகதியும்  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடசாலை கல்வி நடவடிக்கையை ஒரு மணி நேரத்திற்கு நீடிப்பதற்கான தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.