சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களுக்கு அழைப்பாணை விடுத்த உயர் நீதிமன்றம், எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பில்  முன்னுரிமை வழங்க வேண்டிய துறைகளை பட்டியலிட்டு அது குறித்து தெளிவுபடுத்தி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.