இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது 5.2 ஆகவும், மூன்றாவது 5.8 ஆகவும், நான்காவது நிலநடுக்கம் 5 ஆகவும் பதிவானது. இலங்கையின் தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் மாலைதீவுக்கு அருகில் இந்த அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இது இலங்கையை பாதிக்காது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்ச்சிகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.