ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் ஆரம்ப நடவடிக்கை நாளை (5) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவுடன் ஏனைய தரப்புடனும் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இது ஆரம்பம் மாதிரமேயாகும். இனிமேல் பலரும் எமது கூட்டணியில் இணையவுள்ளனர். அதனை தற்போது வெளியிடமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இன்று (4) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.