கடந்த முறையை விட மிக விறுவிறுப்பாக நடந்த விஜய் டி.வி.யின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகளவிலான மக்கள் ஆதரவுடன் அர்ச்சனா வெற்றி பெற்றார்.

106 ஆவது நாள் வரை எஞ்சியிருந்த விஷ்னு, அர்ச்சனா,மாயா,தினேஷ், மணி ஆகியோரில் முறையே விஷ்னு,தினேஷ்,மாயா வெளியேற்றப்பட்டனர்.

இறுதியாக அர்ச்சானாவா? மணி சந்திராவா? என்ற நிலையில் அர்ச்சனாவை வெற்றியாளராக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த போட்டியில் மாயா,பூர்ணிமா,ஜோவிகா,நிக்ஸன் உள்ளிட்ட குழுவினர் மக்களின் கடுமையான எதிர்ப்பை பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதீப்பின் வெளியேற்றம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுவே இந்த நிகழ்வை விறுவிறுப்பாக கொண்டு போய் சேர்த்தது.