எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சோசலிசம் என்று கூறும் நாடுகளில் சோசலிசம் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.சோசலிச, கம்யூனிச சோசலிச நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள் தீவிர முதலாளித்துவத்தையே செயல்படுத்தி வருகின்றன.சீனாவில் அமெரிக்காவை விட முதலாளித்துவம் அமுல்படுத்தப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சோசலிசம் வழியல்லாது,
முதலாளித்துவமே ஒரே வழி. ஐக்கிய தேசியக் கட்சி க்ரோனி முதலாளித்துவத்தை பின்பற்றும் அதே வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி மனிதாபிமான முதலாளித்துவத்தைப் பின்பற்றுகிறது.ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இங்கு தான் வேறுபடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி சமூக ஜனநாயகக் கொள்கையை நம்புகிறது என்றும் அது மனிதாபிமான முதலாளித்துவம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்நாட்டூ கடனை மறுசீரமைப்பில் இந்த அரசாங்கம் பெரும் செல்வந்தர்களை கைவிட்டு,உழைக்கும் மக்கள் மீது வரிகளை சுமத்தியது.இது மனிதாபிமானமற்ற முதலாளித்துவம் என்றும்,வங்குரோத்தான நாட்டில் தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றாலும்,அனைத்து தியாகங்களையும் உழைக்கும் மக்களின் தோள்களில் சுமத்தி பெரும் பணக்காரர்களைப் பாதுகாக்கும் மனிதாபிமானமற்ற போக்கில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதன் பிரகாரமே,ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதாகவும்,இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அழைத்துகொண்டு ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கிறார். செல்கிறார்.செல்கிறார் ஒன்றும் கிடைத்ததாக தெரியவில்லை. விஜயங்களில் எந்த பலனும் இல்லை.

அத்துடன் நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் மக்கள் மீண்டும் ஏமாற கூடாது. இனவாதமற்ற நேர்மையானவர்களுக்கு எமது கூட்டணி கதவு திறந்திருக்கும்.

மாத்தறையில் நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையை வெளியீட்டு வைக்கும் Blue Print நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-