எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை செல்ல பஸ் இல்லாத காரணத்தினால் லொறியில் மாணவவர்கள் சென்றவேளை லொறி தட்டு வீழ்ந்தமையினால் மாணவர்கள் 10 பேர் காயமடைந்த சம்பவம் அநுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தினால்  காயமடைந்த 10 பேர்களில்  மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் கஹட்கஸ்கிலிய- கெகிராவ வீதியிலுள்ள கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்றது. இதன்போது காயமடைந்த 7  மாணவர்கள் பிதுனுவெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.